சென்னை, நவ.29
ஜப்பானைச் சேர்ந்த ஷிபாவ்ரா மெஷின் நிறுவனம், சென்னையில் செயல்பட்டு வரும் தனது தொழிற்சாலையை விரிவுபடுத்துவதற்காக ரூ.225 கோடி கூடுதல் முதலீடு செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இது குறித்து ´ஷிபாவ்ரா மெஷின் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: இந்தியாவுக்கான எங்களது துணை நிறுவனமான ஷிபாவ்ரா மெஷின் இந்தியா பிரைவேட் லிமிடெட்டில் கூடுதலாக ரூ.225 கோடி முதலீடு செய்யவுள்ளோம் என தெரிவித்துள்ளது.
சென்னையிலுள்ள தொழிற்சாலையை விரிவுபடுத்துவதற்காக இந்த முதலீடு செய்யப்படுகிறது. தற்போது பொருள்களைத் தயாரிப்பதற்கான வார்ப்பு இயந்திரங்கள் உற்பத்தி செய்யப்பட்டு வரும் அந்த ஆலையில், விரிவாக்கத்துக்குப் பிறகு அனைத்து மின்சார வார்ப்பு இயந்திரங்களும் உற்பத்தி செய்யப்படும். வார்ப்பு இயந்திரங்களுக்கான இந்தியச் சந்தையில் தற்போது நிறுவனத்துக்கு 5 சத பங்கு உள்ளது. மேலும், இந்த விரிவாக்கத்தின் மூலம் அதனை 10 சதமாக உயர்த்த திட்டமிட்டுள்ளோம் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.